இமாம் ஹஸனுல் பன்னா மாணவனுக்கு எழுதிய கடிதம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
 1935-ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கு நாடொன்றுக்கு கல்வி தேடி தனது மனைவியுடன் சென்ற ஓர் இஸ்லாமிய மாணவனுக்கு இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் பயனுள்ள உபதேசங்களைக் கொண்ட ஒரு கடிதமொன்றை எழுதினார்கள். இந்தக் கடிதம் இன்றைக்கும் நம் போன்றவர்களுக்கும் பொருந்துமே என்ற நிதர்சன உண்மையின் கீழ் இக்கடிதத்தை பிரசுரிக்கிறோம்.
                         நல்ல எண்ணத்துடனும் உயர்ந்த நோக்கத்துடனும் பிரயாணத்தை மேற்கொள்கின்ற உங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.  Continue reading
Posted in கருத்தாக்கங்கள் | Leave a comment

கிப்லா மாற்றமும் உலகத் தலைமைத்துவமும்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
கிப்லா மாற்றமும் உலகத் தலைமைத்துவமும்
            ரமலானுக்குப் பின் அண்ணலார் மிக அதிகமாக நோன்பு நோற்ற மாதம் ஷஅபான் மாதம். இது இஸ்லாமிய வரலாற்றில் முதன்மையான மற்றொரு நிகழ்வுக்கு சாட்சி வகிக்கும் மாதமும் கூட. பராஅத் இரவு பற்றிய விவாதங்களுக்கிடையே, எல்லோரும் மறந்து போன வரலாற்று நிகழ்வு அது. பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது கொண்டிருந்த முஸ்லிம் சமூகம் அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப மக்காவில் உள்ள கஅபாவை நோக்கித் தொழ ஆரம்பித்தது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷஅபான் மாதம் முதலே ஆகும். Continue reading
Posted in கருத்தாக்கங்கள் | Leave a comment

கருத்து வேறுபாடுகள் களைய என்ன வழி?

 “இந்தச் சமுதாயத்தின் அவல நிலையைக் கண்டு மனம் அழுதது. அதற்கானகாரணங்களைத் தேடி என் மனம் அலை பாய்ந்தது. நான் மால்டா சிறையிலிருக்கும் பொழுது இது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்”. – இப்படிக் கூறியது ஷேகுல் ஹிந்த் மௌலானா மஹ்மூத் உல் ஹஸன். 1920ல் தனது 69 வயதில் இதைக் கூறிய அவர்கள், அக்காலத்தில் சிறந்த மார்க்க அறிஞராக திகழ்ந்தது மட்டுமல்லாமல் ஆங்கிலேய காலணி ஆதிக்கத்தையும் எதிர்த்து போராடியவர்கள். Continue reading

Posted in கருத்தாக்கங்கள் | Leave a comment

நீங்கள் எந்த கட்சி?

            மன்னை தாஜுதீன்

 

          அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளது. யார் எந்த கட்சியுடன் கூட்டு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று ஒவ்வொரு கட்சியும் கணக்குப்போட்டுக் கொண்டு இருக்கிறது. முஸ்லிம் கட்சிகளும் விதிவிலக்கல்ல. இச்சமயத்தில்நாம் எந்த கட்சியினராக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

          முஸ்லிம் என்றால் யார்? அவன் யாருக்காக உழைக்க வேண்டும்? ஏன் உழைக்க வேண்டும்? எத்தகைய இலட்சியவாதியாக மிளிர வேண்டும்? அவன் இந்த பூமிப் பந்தில் எத்தகைய மற்றத்தை ஏர்படுத்த வேண்டும்? Continue reading

Posted in கருத்தாக்கங்கள் | Leave a comment

இயேசு அழைக்கிறார்..!

 
கர்த்தரின் திருப்பெயரால்…. 
அன்பான சகோதர, சகோதரிகளே…!  கர்த்தருடைய நீதி விசாரணை நாள் நெருங்கி வருகிறது.
            அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவருனும் அறியான், பரலோகத்தில் உள்ள தூதர்களும் அறியார்கள்.
                                                            (பைபிள் புதிய ஏற்பாடு – மத்தேயு 24:36) Continue reading
Posted in அமைதிக்கான அழைப்பு | Tagged | 1 Comment

ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்களுடன் ஒரு சிறை அனுபவம்

யாஸீன்

ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்களுடன் ஒரு சிறை அனுபவம்

“நான் பலஸ்தீன நாட்டவன். குழந்தைப் பருவம் முதல் இந்தப் புனித பூமியில் நடைபயின்றவன் நான். இந்த மண்ணிலேயே வீர மரணமடைந்து (ஷஹீதாகி) இங்கேயே அடக்கம் செய்யப்பட வேண்டுமென்று எப்பொழுதும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் மனதுதான் என்னுடையது. இந்த உலகத்தில் நீங்கள் சுவர்க்கமாகக் கருதும் எப்பகுதிக்கு அழைத்துக் கொண்டு சென்றாலும் நான் எனது சமூகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாரில்லை. உங்களால் நரகமாக்கப்பட்ட இந்தப் பூமிதான் எனக்கு, உங்களது சுவர்க்க பூமியைவிட மிகவும் விருப்பத்திற்குரியது.”……. Continue reading

Posted in உரையாடல் | Tagged | 1 Comment

போராளிகளின் மனதில்

போராளிகளின் மனதில்

சிகாகோ பல்கலைகழகத்தில் சர்வதேச உறவுகள் பற்றி பாடம் சொல்லி கொடுப்பவர் ராபர்ட் பேப். இவருடைய தலைமையில் 2003 -– 2005 காலகட்டத்தில் அமெரிக்க அரசு சொல்லிக்கொண்டிருக்கும் தற்கொலை தாக்குதல் சம்பந்தமாக  ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் வெளிவந்த உண்மைகள் ஆச்சரியகரமானது. அதிர்ச்சிகரமானது.

அமெரிக்க அரசு கூறிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற தீய கொள்கை காரணமாகத்தான் தற்கொலை தாக்குதல் நடைபெறுகின்றது, அமெரிக்க ராணுவக் கொள்கைகள் காரணமல்ல என்பதை ஆய்வு செய்வதற்காக இது நடத்தப்பட்டது. Continue reading

Posted in கருத்தாக்கங்கள் | Tagged , | Leave a comment

நமது கடமை

நமது கடமை

 

அல்லாஹ் மனிதனை படைத்ததன் நோக்கத்தை பற்றி குறிப்பிடுகிறான்:

ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (திருமறை 51:56)

இதிலிருந்து நமது வாழ்வின் நோக்கமே வணக்கம்தான் என்பது தெளிவாகிறது. சில இபாதத்களை மட்டும் செய்தால் போதும். நான் எனது இறைவனை முழுமையாக வணங்கி விட்டேன் என்ற நமது மனப்பான்மை தவறானது என்பதை இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது. Continue reading

Posted in கருத்தாக்கங்கள் | Tagged | Leave a comment

நபி (ஸல்)பற்றி நல்லறிஞர்களின் கருத்துக்கள்

 
நபி  (ஸல்)பற்றி நல்லறிஞர்களின் கருத்துக்கள்:

1. உயர்ந்த குறிக்கோள், குறைவான சிறிய அளவிளான வசதிவாய்ப்புக்கள், பிரமிக்க வைக்கும் பலன்கள் ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்?

   புகழ்மிக்க மனிதர்களெல்லாம் மதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாதாயக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது.

   ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களோ போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள், அரச வம்சங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டுமே கொள்ளவில்லை. அன்றைய உலகின் மூன்றிலொரு நிலபரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களை ஈர்த்தார்கள். வழிபாட்டுத்தலங்களையும் சமய நெறிகளையும் பல்வேறு கருத்துக்களையும்,கொள்கைகளையும், நம்பிக்கைகளையும்,ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களைப் பதித்தார்கள். Continue reading

Posted in கருத்தாக்கங்கள் | Tagged | 1 Comment

நோன்பின் அருட்கொடை

 

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

நோன்பின் அருட்கொடை 

 மூலம் : அஹ்மது ஷாக்கிர்

தமிழில் : நெல்லி. அஹு நர்கீஸ்                    

நோன்பின் மாதமாகிய ரமலான் கணக்கிட இயலா எண்ணற்ற அருட்கொடைகள் நிரம்பியதாய் உள்ளது.அதன் முக்கியத்துவம் புரிந்தவர்கள் வருடம் முழுவதும் ரமலான் மாதமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவர்.முழு நம்பிக்கையுடனும்,எதிர்பார்ப்புகளுடனும் நோன்பு நோற்கும் முஸ்லீம்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருள்களை பொழிகிறான்.

     ரமலானில் நோற்கப்படும் நோன்பின் பயன்கள் வகைப்படுத்தப்பட்டு அதன் பயன்கள் மட்டும் சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன. Continue reading

Posted in வணக்கங்கள் | Tagged | Leave a comment